செய்திகள்

பெருந்துறை அருகே அறையில் ஒயர் பெட்டில் படுத்து தூங்கிய வாலிபர் தவறி விழுந்து பலி

Published On 2018-08-30 11:48 GMT   |   Update On 2018-08-30 11:48 GMT
அறையில் ஒயர் பெட்டில் படுத்து தூங்கிய வடமாநில வாலிபர் தவறி விழுந்து பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெருந்துறை:

அசாம் மாநிலம் லக்கம் பூரை சேர்ந்தவர் மனோஜ் கோனே (வயது 27). இவர் பெருந்துறை சிப்காட்டில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

கம்பெனி சார்பில் கொடுக்கப்பட்டிருந்த அறையில் தங்கி இருந்தார். அந்த அறையில் கீழிருந்து மேலாக 3 அடுக்கு கொண்ட பெட் (படுக்கை) உள்ளது.

கடந்த 22-ந் தேதி இரவு 10.30 மணிக்கு வேலை முடிந்து பெட்டின் மேல் வரிசை படுக்கையில் தூங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது அவர் எதிர்பாராத விதமாக பெட்டில் இருந்து தவறி கிழே விழுந்தார். இதில் அவரது தலையில் பலத்த அடிபட்டது.

உடனடியாக அவரை 108 ஆம்புலன்ச மூலம் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் மனோஜ் கோனே பரிதாபமாக இறந்தார். இது குறித்து அவரது உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News