செய்திகள்

நாமக்கல்லில் அதிரடி சோதனை - ஹெல்மெட் அணியாமல் வந்த 170 பேருக்கு அபராதம்

Published On 2018-08-30 09:47 GMT   |   Update On 2018-08-30 09:47 GMT
நாமக்கல்லில் கடந்த இரண்டு நாட்களில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்த 170 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கேடசன் தெரிவித்தார்.
நாமக்கல்:

நாமக்கல்லில் விதிமுறைகளை மீறி இருசக்கர வாகனத்திற்கு அபராதம் விதித்துள்ளனர்.

இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்பவர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கடேசன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கலைச்செல்வி, சண்முக ஆனந்த் ஆகியோர் நேற்று நல்லிபாளையம் பைபாஸ் சாலை அருகில் இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் வருபவர்களை நிறுத்தி உரிய அறிவுரை கூறினார்கள். பின்னர் அவர்களுக்கு உடனடி அபராதமாக ரூ 100 விதிக்கப்பட்டது.

இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து வருபவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என அப்போது அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

கடந்த இரண்டு நாட்களில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்த 170 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கேடசன் தெரிவித்தார்.

Tags:    

Similar News