என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » not wearing helmet
நீங்கள் தேடியது "Not Wearing Helmet"
நாமக்கல்லில் கடந்த இரண்டு நாட்களில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்த 170 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கேடசன் தெரிவித்தார்.
நாமக்கல்:
இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்பவர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கடேசன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கலைச்செல்வி, சண்முக ஆனந்த் ஆகியோர் நேற்று நல்லிபாளையம் பைபாஸ் சாலை அருகில் இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் வருபவர்களை நிறுத்தி உரிய அறிவுரை கூறினார்கள். பின்னர் அவர்களுக்கு உடனடி அபராதமாக ரூ 100 விதிக்கப்பட்டது.
இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து வருபவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என அப்போது அவர்கள் கேட்டுக் கொண்டனர்.
கடந்த இரண்டு நாட்களில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்த 170 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கேடசன் தெரிவித்தார்.
நாமக்கல்லில் விதிமுறைகளை மீறி இருசக்கர வாகனத்திற்கு அபராதம் விதித்துள்ளனர்.
இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்பவர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கடேசன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கலைச்செல்வி, சண்முக ஆனந்த் ஆகியோர் நேற்று நல்லிபாளையம் பைபாஸ் சாலை அருகில் இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் வருபவர்களை நிறுத்தி உரிய அறிவுரை கூறினார்கள். பின்னர் அவர்களுக்கு உடனடி அபராதமாக ரூ 100 விதிக்கப்பட்டது.
இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து வருபவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என அப்போது அவர்கள் கேட்டுக் கொண்டனர்.
கடந்த இரண்டு நாட்களில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்த 170 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கேடசன் தெரிவித்தார்.
ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவோருக்கு, ஆபத்தை உணர்த்தும் வகையில் பெங்களூர் போலீசார் வழங்கிய புதுவிதமான கவுன்சிலிங் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. #HelmetCampaign #BangalorePolice
பெங்களூரு:
இருசக்கர வாகனங்களில் செல்வோர் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று போக்குவரத்து காவல்துறை தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. வெறும் வார்த்தைகளால் இந்த பிரச்சாரத்தை முன்னெடுத்துச் சென்றால் வாகன ஓட்டிகளின் கவனத்தை ஈர்க்க முடியாது என்பதால், இப்போது வித்தியாசமான முறைகளை போலீசார் கையில் எடுத்துள்ளனர்.
ஹெல்மெட் போடாமல் வந்து விபத்தில் சிக்கினால் என்ன ஆகும்? என்பதை உணர்த்தும் வகையில் பாசக் கயிற்றால் வாகன ஓட்டியின் கழுத்தில் மாட்டி இழுக்கிறார். சித்ரகுப்தன் வேடத்தில் மற்றொரு போலீஸ்காரரும் உடனிருக்கிறார். இந்த பிரச்சார வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
இருசக்கர வாகனங்களில் செல்வோர் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று போக்குவரத்து காவல்துறை தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. வெறும் வார்த்தைகளால் இந்த பிரச்சாரத்தை முன்னெடுத்துச் சென்றால் வாகன ஓட்டிகளின் கவனத்தை ஈர்க்க முடியாது என்பதால், இப்போது வித்தியாசமான முறைகளை போலீசார் கையில் எடுத்துள்ளனர்.
அவ்வகையில் கர்நாடக மாநிலம் பெங்களூர் போக்குவரத்து போலீசார், முக்கியமான சாலைகளில் எமதர்மன் வேஷத்தில் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்கின்றனர். ஹெல்மெட் அணியாமல் வரும் இருசக்கர வாகன ஓட்டியை எமன் வேடத்தில் வரும் போலீஸ்காரர் நிறுத்துகிறார். கையில் பாசக் கயிறு வைத்துக்கொண்டு மிரட்டும் அவர், வாகன ஓட்டியிடம் ஹெல்மெட் அணியவேண்டியதன் அவசியத்தை எடுத்துக் கூறுகிறார்.
ஹெல்மெட் போடாமல் வந்து விபத்தில் சிக்கினால் என்ன ஆகும்? என்பதை உணர்த்தும் வகையில் பாசக் கயிற்றால் வாகன ஓட்டியின் கழுத்தில் மாட்டி இழுக்கிறார். சித்ரகுப்தன் வேடத்தில் மற்றொரு போலீஸ்காரரும் உடனிருக்கிறார். இந்த பிரச்சார வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
இதேபோன்று சமீபத்தில் சென்னையில் ஒரு போக்குவரத்து போலீஸ்காரர் எமன் வேடத்தில் வந்து, ஹெல்மெட் போடாமல் வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு அறிவுரைகள் வழங்கியது குறிப்பிடத்தக்கது. #HelmetCampaign #BangalorePolice
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X