செய்திகள்
குழந்தை கடத்திய வடமாநில வாலிபரை கட்டி வைத்து அடித்த பொதுமக்கள்.

கீழ்பென்னாத்தூர் அருகே 3 வயது பெண் குழந்தையை கடத்திய வடமாநில வாலிபருக்கு அடி-உதை

Published On 2018-08-29 07:41 GMT   |   Update On 2018-08-29 07:41 GMT
கீழ்பென்னாத்தூர் அருகே 3 வயது பெண் குழந்தையை கடத்த முயன்ற வடமாநில வாலிபரை பிடித்து கட்டி வைத்து அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. #ChildKidnapped
கீழ்பென்னாத்தூர்:

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள ராஜாதோப்பு கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் விவசாயி. இவரது 3 வயது மகள் இன்று காலை வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது 3 வடமாநில வாலிபர்கள் அங்கு வந்தனர்.

அதில் ஒருவன் நைசாக குழந்தையை தூக்கினார். 3 பேரும் குழந்தையுடன் நடக்க தொடங்கினர். இதனைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் திருக்கிட்டு கூச்சலிட்டனர். சுதாரித்து கொண்ட வாலிபர்கள் 3 பேரும் தப்பி ஓடினர்.

பொதுமக்கள் விரட்டி சென்று குழந்தையுடன் தப்பி ஓடிய வாலிபரை மடக்கி பிடித்தனர். மற்ற 2 பேர் தப்பி ஓடிவிட்டனர்.

பிடிபட்ட வாலிபரிடம் இருந்து குழந்தையை மீட்டனர். அந்த வாலிபரை கட்டி வைத்து அடித்து உதைத்தனர்.

இதுபற்றி கீழ்பென்னாத்தூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வடமாநில வாலிபரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். அவர் இந்தியில் பேசியதால் அவர் பற்றிய விவரங்களை சேகரிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும் தப்பி ஓடிய வாலிபர்களை தேடி வருகின்றனர்.

தமிழகத்தில் குழந்தை கடத்தல் சந்தேகத்தில் வடமாநில வாலிபர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டனர்.

போளூர் தம்புகொட்டான் பாறையில் கடந்த மே மாதம் கோவிலுக்கு வந்த சென்னையை சேர்ந்தவர்களை பொதுமக்கள் தாக்கினர். இதில் ருக்குமணி என்பவர் பலியானார். தாக்குதலில் காயமடைநத கஜேந்திரன் என்பவர் 3 மாதங்களுக்கு பிறகு நேற்று இறந்தார்.

இந்த நிலையில் வடமாநில வாலிபர்கள் குழந்தை கடத்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   #ChildKidnapped



Tags:    

Similar News