செய்திகள்

மயிலாடுதுறை அருகே பினாயிலை குடித்து தபால் ஊழியர் தற்கொலை முயற்சி

Published On 2018-08-28 17:27 GMT   |   Update On 2018-08-28 17:27 GMT
மயிலாடுதுறை அருகே பினாயிலை குடித்து தபால் ஊழியர் ஒருவர் தற்கொலைக்கு முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மயிலாடுதுறை:

நாகை மாவட்டம் மயிலாடுதுறை கீழபட்டமங்கலம் பகுதியை சேர்ந்தவர் அமைதிராஜ் (வயது50). இவர், மயிலாடுதுறை அருகே வடகரை கிராமத்தில் உள்ள தபால் அலுவலகத்தில் புறநிலை ஊழியராக பணியாற்றி வருகிறார். நேற்று வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த அமைதிராஜ், திடீரென பினாயிலை குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். இதில் மயங்கி விழுந்த அவரை உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கக்தில் இருந்தவர்கள் மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அமைதிராஜிடம், தபால் துறை அதிகாரி ஒருவர் சேமிப்பு கணக்கு மற்றும் இன்சூரன்ஸ் கணக்கு தொடங்க வாடிக்கையாளர்களை அதிக அளவில் சேர்க்க வேண்டும் என அடிக்கடி வலியுறுத்தி வந்ததாகவும், அதனால் வேலைப்பளு அதிகரித்ததால் மன வேதனை அடைந்த அமைதிராஜ் தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் டெல்லிபாபு மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பினாயிலை குடித்து தபால் ஊழியர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் மயிலாடுதுறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
Tags:    

Similar News