செய்திகள்
அரியலூர் கோவில்களில் தே.மு.தி.க.வினர் சிறப்பு வழிபாடு
விஜயகாந்த் பிறந்த நாளையட்டி அரியலூர் மாவட்ட தே.மு.தி.க.வினர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
அரியலூர்:
அரியலூர் மாவட்ட தே.மு.தி.க சார்பில் மாவட்ட செயலாளர் ராம.ஜெயவேல் தலைமையில் விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு அரியலூர் செட்டிஏரி கரையில் உள்ள சக்திவிநாயகர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடும், அன்னதானமும் நடைபெற்றது. முக்கிய இடங்களில் கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது. ஏழை, எளிய பெண்கள் 50 பேருக்கு சேலை வழங்கப்பட்டது.
அரியலூர் ஒன்றியம் கோவிந்தபுரம் விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடும், கொடியேற்றி இனிப்புகள் வழங்கியும் ஏழை எளியவர்களுக்கு வேட்டி, சேலை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் அரியலூர் நகர செயலாளர் தாமஸ் ஏசுதாஸ், மாவட்ட பொருளாளர் கவியரசன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஆனந்தன், மாவட்ட தொழிற்சங்க துணை தலைவர் பழக்கடை பாண்டியன், மாவட்ட தொண்டரணி நிர்வாகிகள் நல்லதம்பி, ராமச்சந்திரன், நகர நிர்வாகிகள் மதி, ரமேஷ், சுந்தர், ராதாகிருஷ்ணன், சின்னமுருகன், நமச்சிவாயம், சக்திவேல், மருதை, பாலா, செல்வராஜ், பாலசுப்பிரமணியன், சக்திவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அரியலூர் மாவட்ட தே.மு.தி.க சார்பில் மாவட்ட செயலாளர் ராம.ஜெயவேல் தலைமையில் விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு அரியலூர் செட்டிஏரி கரையில் உள்ள சக்திவிநாயகர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடும், அன்னதானமும் நடைபெற்றது. முக்கிய இடங்களில் கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது. ஏழை, எளிய பெண்கள் 50 பேருக்கு சேலை வழங்கப்பட்டது.
அரியலூர் ஒன்றியம் கோவிந்தபுரம் விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடும், கொடியேற்றி இனிப்புகள் வழங்கியும் ஏழை எளியவர்களுக்கு வேட்டி, சேலை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் அரியலூர் நகர செயலாளர் தாமஸ் ஏசுதாஸ், மாவட்ட பொருளாளர் கவியரசன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஆனந்தன், மாவட்ட தொழிற்சங்க துணை தலைவர் பழக்கடை பாண்டியன், மாவட்ட தொண்டரணி நிர்வாகிகள் நல்லதம்பி, ராமச்சந்திரன், நகர நிர்வாகிகள் மதி, ரமேஷ், சுந்தர், ராதாகிருஷ்ணன், சின்னமுருகன், நமச்சிவாயம், சக்திவேல், மருதை, பாலா, செல்வராஜ், பாலசுப்பிரமணியன், சக்திவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.