செய்திகள்
2 பெண் குழந்தைகளின் தாய் தற்கொலை- தூக்கில் தொங்கினார்
ஈரோடு அருகே குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2 பெண் குழந்தைகளின் தாய் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு அகத்தியர் வீதியில் வசித்தவர் பேச்சியம்மாள் என்ற நந்தினி (வயது 22). கணவர் பெயர் விஜயன்.
இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கணவன்- மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சித்தோட்டில் வசித்து வந்த இவர்கள் பிரிந்து விட்டனர்.
பேச்சியம்மாள் தனது 2 குழந்தைகளுடன் ஈரோடு அக்த்தியர் வீதியில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று குழந்தைகள் 2 பேரம் பள்ளி முடிந்து திரும்பினர். அப்போது வீட்டின் உள்பக்க கதவு தாழ் போடப்பட்டிருந்தது. உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து திறந்த போத உள்ளே மின் விசிறியில் நந்தினி தூக்குப்போட்டு தற்கொலை செய்த பிணமாக தொங்கினார்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் ஈரோடு டவுன் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கூறினர். போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
ஈரோடு அகத்தியர் வீதியில் வசித்தவர் பேச்சியம்மாள் என்ற நந்தினி (வயது 22). கணவர் பெயர் விஜயன்.
இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கணவன்- மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சித்தோட்டில் வசித்து வந்த இவர்கள் பிரிந்து விட்டனர்.
பேச்சியம்மாள் தனது 2 குழந்தைகளுடன் ஈரோடு அக்த்தியர் வீதியில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று குழந்தைகள் 2 பேரம் பள்ளி முடிந்து திரும்பினர். அப்போது வீட்டின் உள்பக்க கதவு தாழ் போடப்பட்டிருந்தது. உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து திறந்த போத உள்ளே மின் விசிறியில் நந்தினி தூக்குப்போட்டு தற்கொலை செய்த பிணமாக தொங்கினார்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் ஈரோடு டவுன் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கூறினர். போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews