செய்திகள்

மன்னார்குடி அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை தாக்கி 10 பவுன் நகை பறிப்பு

Published On 2018-08-28 10:33 GMT   |   Update On 2018-08-28 10:33 GMT
மன்னார்குடி அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை தாக்கி நகை பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மன்னார்குடி:

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கண்டிதம் பேட்டை கீழத்தெரு பகுதியை சேர்ந்தவர் முருகையன். இவரது மனைவி சரோஜா (வயது 65). இவர்களது 2 மகன்களும் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகின்றனர்.

முருகையன் இறந்து விட்டதால் சரோஜா மட்டும் கீழத்தெருவில் தனியாக வசித்து வருகிறார். இவர்களுக்கு சொந்தமாக விவசாய நிலம் உள்ளது. சரோஜா வால் விவசாயத்தை பார்க்க முடியாது என்பதால் வேலைக்கு தொழிலாளிகளை வைத்து விவசாய பணிகளை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் சரோஜா வயலில் டிராக்டர் டிரைவராக வேலை பார்த்த 2 பேர் நேற்று மாலை அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது தன்னிடம் வேலை பார்த்த வர்கள் என்று சரோஜாவும் அவர்களை வீட்டிற்கு அழைத்து சென்று காபி போட்டு கொடுத்துள்ளார்.

அவர்கள் 2 பேரும் சரோஜாவிடம் பேசி கொண்டிருந்த நேரத்தில் திடீரென கட்டையால் சரோஜாவை சரமாரியாக தாக்கியுள்ளனர். பின்னர் அவரிடம் இருந்து 10 பவுன் நகையை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

சரோஜாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வந்து அவரை மீட்டு தஞ்சையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து மன்னார்குடி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் டி.எஸ்.பி. அசோகன் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
Tags:    

Similar News