செய்திகள்

ஹெல்மெட் அணியாமல் வந்த 1800 பேர் மீது வழக்கு

Published On 2018-08-27 11:02 GMT   |   Update On 2018-08-27 11:02 GMT
ஈரோடு மாவட்டத்தில் ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்ந்து ஹெல்மெட் அணியாமல் வந்தவர்கள் என மொத்தம் 1800 வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்ந்து ஹெல்மெட் அணியாமல் வந்தவர்கள் என மொத்தம் 1800 வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன.

இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள், பின்னால் அமர்ந்து செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது

இதையடுத்து தமிழகம் முழுவதும் போக்குவரத்து போலீசார் வாகன ரோந்து பணியை தீவிரப்படுத்தினர் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தவர்கள் மீதும் பின்னால் உட்கார்ந்து ஹெல்மெட் அணியாமல் வந்தவர்கள் மீதும் என வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.

ஈரோடு மாவட்டத்திலும் போக்குவரத்து போலீசார் உஷார்படுத்தப்பட்டு ஆங்காங்கே வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். ஈரோடு மாவட்டம் முழுவதும் கடந்த 2 நாட்களாக போக்குவரத்து போலீஸார் கடும் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் நேற்று மட்டும் ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்ந்து ஹெல்மெட் அணியாமல் வந்தவர்கள் என மொத்தம் 1800 வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன ஈரோடு மாநகரில் மட்டும் 400க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
Tags:    

Similar News