செய்திகள்

மதுரையில் மத்திய சிறை கைதி தற்கொலை முயற்சி

Published On 2018-08-27 09:29 GMT   |   Update On 2018-08-27 09:29 GMT
மதுரையில் மத்திய சிறை கைதி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:

மதுரை கரிமேடு எம்.கே. புரம் மெயின்ரோட்டை சேர்ந்தவர் பூமிநாதன். இவரது மகன் ஆதிபரமேஸ்வரன் (வயது20). வழக்கில் கைதாகி மத்திய சிறையில் விசாரணை கைதியாக உள்ளார்.

கடந்த சில நாட்களாக தனக்கு உடல்நலம் சரியில்லை என கூறிய ஆதிபரமேஸ்வரன் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லுமாறு சிறை அதிகாரிகளிடம் தெரிவித்தார். ஆனால் அங்குள்ள போலீசார் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்த நிலையில் இன்று காலை ஆதிபரமேஸ்வரன் சிறையில் உள்ள டியூப் லைட்டை உடைத்து தனது கையை கீறிக்கொண்டார். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.

சிறை அதிகாரிகள் விரைந்து வந்தனர். அப்போது தன்னை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லாவிட்டால் கழுத்தில் குத்திக் கொண்டு தற்கொலை செய்து கொள்ளபோவதாக ஆதிபரமேஸ்வரன் மிரட்டினார்.

இதுகுறித்த புகாரின் பேரில் கரிமேடு போலீசார் விசாரணை நடத்தி ஆதி பரமேஸ்வரன் மீது தற்கொலைக்கு முயன்றதாக வழக்குப்பதிவு செய்தனர்.

நெல்லை மாவட்டம் மேலபாளையத்தை அடுத்த பிராஞ்சேரி வெங்கடாசலபுரத்தைச் சேர்ந்தவர் பேச்சி (72). வழக்கில் தண்டனை பெற்று மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பேச்சி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
Tags:    

Similar News