செய்திகள்
ஸ்ரீபெரும்புதூர் அருகே விபத்தில் வாலிபர் பலி
ஸ்ரீபெரும்புதூர் அருகே விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதூர்:
ஸ்ரீபெரும்புதூர்- குன்றத்தூர் சாலையில் உள்ள டி.வி.எஸ். குடியிருப்பில் வசிப்பவர் வெங்கடேஷ் (35). இவர் ஸ்ரீபெரும்புதூரில் இருந்து வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.
கச்சிப்பட்டு பகுதியில் வந்த போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம், திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதி சென்றுவிட்டது. இதில் படுகாயம் அடைந்த வெங்கடேசை அக்கம் பக்கத்தினர் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். போகும் வழியிலேயே வெங்கடேஷ் இறந்து போனார். இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன், வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.