செய்திகள்

திருச்சியில் விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள்

Published On 2018-08-25 14:56 GMT   |   Update On 2018-08-25 14:56 GMT
விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் விஜயகாந்த நீடூழி வாழ வேண்டி தங்க தேர் இழுத்து தேமுதிகவினர் வழிப்பட்டனர்.
திருச்சி:

திருச்சி மாநகர் மாவட்ட தே.மு.தி.க. சார்பில் அதன் தலைவர் விஜயகாந்த் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. திருச்சி அரியமங்கலத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் டி.வி.கணேஷ் தலைமை தாங்கி கட்சி கொடியேற்றி, தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சிக்கு அவை தலைவர் அலங்கராஜ் முன்னிலை வகித்தார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் விஜயகாந்த நீடூழி வாழ வேண்டி தங்க தேர் இழுத்து வழிப்பட்டனர். நிகழ்ச்சிக்கு உறையூர் பகுதி செயலாளர் மோகன் தலைமை தாங்கினார். இன்று மதியம் திருச்சி மலைக்கோட்டை பகுதி தே.மு.தி.க. சார்பில் 11-வது வார்டு சறுக்குபாறை அய்யனார் கோவிலில் விஜயகாந்த் பெயருக்கு அர்ச்சனை செய்து கிடா வெட்டி விருந்து அளிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு பகுதி செயலாளர் நூர்முகமது தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் பழனி முன்னிலை வகித்தார். ஏர்போர்ட் பகுதி சார்பில் பகுதி செயலாளர் குமார் ஏற்பாட்டில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட செயலாளர் டி.வி. கணேஷ் வழங்கினார். 

நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் வி.கே. ஜெயராமன், பொருளாளர் மில்டன் குமார், தலைமை பொது குழு உறுப்பினர்கள் கணேஷ், ராமு,ராஜ்குமார், முகேஷ், பெருமாள்,பகுதி செயலாளர்கள் வெல்டிங் சிவா,கருணாகரன், தொழிற் சங்கம் திருப்பதி, தமிழ் செல்வன், முன்னாள்மாவட்ட செயலாளர்  தங்கமணி, மகளிரணி செயலாளர் பிரித்தா விஜய் ஆனந்த், குமாரசரவணன், மாவட்ட இளைஞரணி சுப்புடு உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News