செய்திகள்

திருச்சி அருகே ரெயில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்த வாலிபர்

Published On 2018-08-25 13:59 GMT   |   Update On 2018-08-25 13:59 GMT
திருச்சி அருகே இன்று காலை தண்டவாளத்தில் ஒரு ஆணின் பிணம் கிடந்தது. அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருச்சி:

திருச்சி ஜீயபுரம் - எலமனூர் ரெயில் பாதையில் இன்று காலை தண்டவாளத்தில் ஒரு ஆணின் பிணம் கிடந்தது. இது குறித்து திருச்சி ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் லெட்சுமி சம்பவ இடத்திற்கு சென்று வாலிபரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார். அப்போது இறந்த வாலிபர் அந்தநல்லூர் முத்தமிழ் நகரைச் சேர்ந்த வீரமணி - பாக்கியலெட்சுமி தம்பதியினரின் மகன் சுரேஷ்குமார் (வயது 35) என்பது தெரியவந்தது.

சிறிது மனநலம் பாதிக்கப்பட்ட சுரேஷ்குமார் இன்று காலை அந்த வழியாக சென்ற போது ரெயில் மோதி இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

சுரேஷ்குமார் உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது உடல் டாக்டர்கள் மூலம் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. பிரேத பரிசோதனையின் முடிவில் அவர் எப்படி இறந்தார் என்பது தெரியவரும். இந்த சம்பவம் ஜீயபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News