செய்திகள்
சுரண்டை அருகே தூங்கிய பெண்ணிடம் நகை பறிப்பு
சுரண்டை அருகே வீட்டில் தூங்கிய பெண்ணிடம் மர்மநபர் நகையை பறித்து சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுரண்டை:
சுரண்டை அருகே ராஜகோபாலபேரி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கருப்பசாமி. விவசாயி. இவருடைய மனைவி மாரியம்மாள் (வயது35).
சம்பவத்தன்று இரவு காற்றுக்காக வீட்டின் கதவை திறந்து வைத்து விட்டு இருவரும் தூங்கினர். நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர் தூங்கி கொண்டிருந்த மாரியம்மாள் கழுத்தில் கிடந்த 4 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டார்.
இது குறித்து வீரகேரளம்புதூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் சத்தியவேந்தன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
சுரண்டை அருகே ராஜகோபாலபேரி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கருப்பசாமி. விவசாயி. இவருடைய மனைவி மாரியம்மாள் (வயது35).
சம்பவத்தன்று இரவு காற்றுக்காக வீட்டின் கதவை திறந்து வைத்து விட்டு இருவரும் தூங்கினர். நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர் தூங்கி கொண்டிருந்த மாரியம்மாள் கழுத்தில் கிடந்த 4 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டார்.
இது குறித்து வீரகேரளம்புதூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் சத்தியவேந்தன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.