செய்திகள்

கஞ்சா கடத்திய சிறுவன் கைது

Published On 2018-08-25 06:19 GMT   |   Update On 2018-08-25 06:19 GMT
திருமழிசை அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் 1½ கிலோ கஞ்சா கடத்திய சிறுவனை கைது செய்தனர்.
பூந்தமல்லி:

திருமழிசை அருகே வெள்ளவேடு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் சென்ற சிறுவனை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் 1½ கிலோ கஞ்சா இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

அந்த சிறுவனிடம் விசாரணை நடத்தியதில் அவனது பெயர் யுவராஜ் (வயது 16). திருமழிசையை அடுத்த பிராயம்பேட்டையை சேர்ந்தவர் என்று தெரியவந்தது. இதையடுத்து யுவராஜை கைது செய்த போலீசார் நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். #tamilnews
Tags:    

Similar News