செய்திகள்

கனிமொழி எம்.பி நிதியில் கட்டப்படவுள்ள ரேசன்கடைக்கான இடம் தேர்வு- அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ ஆய்வு

Published On 2018-08-24 12:19 GMT   |   Update On 2018-08-24 12:19 GMT
ஆலந்தலையில் கனிமொழி எம்.பி நிதியில் கட்டப்படவுள்ள ரேசன்கடைக்கான இடத்தை அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ ஆய்வு செய்தார்.

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் அருகே உள்ள ஆலந்தலை கிராமத்தில் அந்த பகுதி மக்கள் ரேசன் கடை, மீன் வலைக்கூடம் ஆகியவற்றிற்கு புதிதாக கட்டிடம் கட்டித் தரக்கோரி அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்திருந்தனர். இவர்கள் கோரிக்கையை ஏற்று அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தி.மு.க. எம்.பி கனிமொழியிடம் தெரிவித்தார்.

இதையடுத்து கனிமொழி எம்.பி தனது நிதியில் இருந்து ரேசன்கடை அமைக்க ரூ10 லட்சம், மீன் வலைக்கூடம் அமைக்க ரூ25 லட்சம் என மொத்தம் ரூ35 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளார். அதற்கான இடத்தை அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. ஆலந்தலை கிராமத்தில் ஆய்வு செய்தார். ஆய்வின் போது தி.மு.க. மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரி சங்கர், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் ஸ்ரீதர் ரொட்ரிகோ, நகர செயலாளர் வாள் சுடலை, முன்னாள் கவுன்சிலர்கள் கோமதிநாயகம், சுதாகர், ஆலந்தலை ஊர் நல கமிட்டி தலைவர் அந்தோணி, கொம்பீரியர் சபை சந்திரலோபோ, வார்டு செயலாளர் லெவி, பரமன்குறிச்சி ஊராட்சி செயலாளர் இளங்கோ, மாவட்ட பிரதிநிதி முத்துக்குமார் உள்பட பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News