செய்திகள்

கல்வி அதிகாரியை முற்றுகையிட்டு ஆசிரியர்கள் போராட்டம்

Published On 2018-08-22 11:35 GMT   |   Update On 2018-08-22 11:35 GMT
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்க பள்ளி ஆசிரியர்கள் கல்வி அதிகாரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
லாலாப்பேட்டை:

கிருஷ்ணராயபுரம் வட்டாரத்தில் ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டிய சேமிப்பு விடுப்பு ஒப்படைப்புக்கான ஊதியம் வழங்க வேண்டும், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு 1 ஆண்டாகியும் பதவி உயர்வுக்கான ஊதிய நிர்ணயம் செய்யப்படவில்லை.

ஜூன் 2018ல் பதவி உயர்வு பெற்றவர்களுக்கு புதிய ஊதியம் வழங்கவில்லை. எனவே அவற்றை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உட்பட 22 கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் மாவட்ட செயலாளர் மணிகண்டன், கிருஷ்ணராயபுரம் வட்டார கிளையின் அமைப்பு குழு தலைவர் சக்திவேல், செயலாளர் சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலையில் ஆசிரியர்கள் பகுதி -2 வட்டார கல்வி அலுவலரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

கோரிக்கைகளின் மீது விரைவில் நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து ஆசிரியர்கள் கலைந்து சென்றனர். இருப்பினும் 1 வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த கட்ட போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் தெரிவித்துள்ளனர். #tamilnews
Tags:    

Similar News