செய்திகள்

விருத்தாசலம் அருகே கூழாங்கற்கள் கடத்தியவர் கைது

Published On 2018-08-20 12:35 GMT   |   Update On 2018-08-20 12:35 GMT
விருத்தாசலம் அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அனுமதியின்றி கூழாங்கற்கள் கடத்தி வந்தவரை போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம்:

விருத்தாசலம் அடுத்த ஆலடி சப்இன்ஸ்பெக்டர் அண்ணாமலை தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நடியப்பட்டு கிராமத்தில் இருந்து லாரியில் அனுமதியின்றி கூழாங்கற்கள் கடத்தி வந்த லாரியின் உரிமையாளர் பாலமுருகன் (வயது 30), டிரைவர் பாலகிருஷ்ணன் (26) ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். 

பின்னர் பாலகிருஷ்ணனை கைது செய்து கூழாங்கற்கள் ஏற்றி வந்த லாரியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News