செய்திகள்

தேனி அருகே மணல் கடத்திய வாலிபர் கைது

Published On 2018-08-19 09:33 GMT   |   Update On 2018-08-19 09:33 GMT
தேனி அருகே மணல் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தேனி:

தேனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மணல் கடத்தல் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் விவசாயிகள் மட்டுமல்லாது பொதுமக்களும் குடிநீருக்காக அலையும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே மணல் கடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

சன்னாசிபுரம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது வேகமாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனையிட்டபோது அதில் 6 மூட்டை மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது. மணல் மூடைகளை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக போடி கீழத்தெருவை சேர்ந்த பாலமுருகன் (25) என்பவரை கைது செய்தனர்.

Tags:    

Similar News