செய்திகள்

வீட்டிற்குள் புகுந்து குழந்தை கழுத்தில் கிடந்த நகை திருட்டு

Published On 2018-08-18 17:21 GMT   |   Update On 2018-08-18 17:21 GMT
வீட்டின் பின் பக்க கதவு பூட்டை உடைத்து, குழந்தை கழுத்தில் கிடந்த 1 பவுன் தங்க சங்கிலி மற்றும் பீரோவில் இருந்த ரூ.10 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அடுத்துள்ள உதய நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் ஸ்டாலின் (வயது35). இவரது மனைவி இளவழகி (25). ஸ்டாலின் தாய் செல்வி. இவர்கள் 3 பேரும் ஒரு வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் நேற்று முன்தினம் இரவு முன் பக்க கதவை திறந்து வைத்து, வீட்டின் வெளியே படுத்திருந்தனர்.

இந்நிலையில் அதிகாலை குழந்தை அழும் சத்தத்தை கேட்டு இளவழகி வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டின் பின் பக்க கதவு பூட்டை உடைத்து, குழந்தை கழுத்தில் கிடந்த 1 பவுன் தங்க சங்கிலி, இடுப்பில் கட்டியிருந்த வெள்ளி கொடி, வெள்ளி கொலுசு, பீரோவில் இருந்த ரூ.10 ஆயிரத்தையும் மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து புகாரின் பேரில் தா.பழூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை திருடி சென்று மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 
Tags:    

Similar News