செய்திகள்

செந்துறை பகுதியில் நாளை மின்தடை

Published On 2018-08-17 12:51 GMT   |   Update On 2018-08-17 12:51 GMT
செந்துறை பகுதியில் நாளை பராமரிப்பு பணி நடைபெறுவதால் காலை 9.45 மணி முதல் பணி முடியும் வரை மின்விநியோகம் இருக்காது.
செந்துறை:

செந்துறை துணைமின் நிலையத்தில் நாளை 18-ந் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இங்கிருந்து மின்  வினியோகம் பெரும்பகுதிகளான செந்துறை, இலங்கைச்சேரி, ஆதிகுடிக்காடு, உஞ்சினி, நல்லாம்பாளையம், சிறுகடம்பூர், சோழன் குறிச்சி, ஆனந்தவாடி, சென்னிவனம், ராயம்புரம், அகரம், கட்டையன்குடிக்காடு,மருவத்தூர், சேடக்குடிக்காடு, விழுப்பணங்குறிச்சி, பொன்பரப்பி, சிறுகளத்தூர், மருதூர்,

வஞ்சினபுரம், நல்லநாயகபுரம், நக்கம்பாடி, மணப்பத்தூர், சோழன்குடிக்காடு, வங்காரம்,  அயன்தத்தனூர், முல்லையூர், நத்தகுழி, உகந்த நாயகன்குடிக்காடு, பெரியாகுறிச்சி, இலைக்கடம்பூர், நிண்ணியூர், பிலாக்குறிச்சி, வீராக்கன், செதலவாடி, நாகல்குழி, கீழமாளிகை, மத்துமடக்கி ஆகிய பகுதிகளுக்கு காலை 9.45 முதல் மாலை பணி முடியும் வரை மின் வினியோகம் நிறுத்தப்படுமென செந்துறை உதவி செயற்பொறியாளர் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News