செய்திகள்
வேலூரில் தேசியகொடி தலைகீழாக ஏற்றியது குறித்து டி.எஸ்.பி.க்கு நோட்டீசு
வேலூரில் சுதந்திர தினத்தன்று தேசியகொடியை தலைகீழாக ஏற்றியது தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு வாணியம்பாடி டி.எஸ்.பி.க்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
வேலூர்:
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள திம்மாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் நேற்று சுதந்திரதினவிழா கொண்டாடப்பட்டது. போலீசார் தலைகீழாக தேசிய கொடியேற்றி இனிப்பு வழங்கினர்.
இதனை பார்த்த பொதுமக்கள் தலைகீழாக பறந்த தேசிய கொடியை படம் பிடித்து வாட்ஸ்-அப், பேஸ்புக்கில் பரவவிட்டனர். சில மணி நேரத்தில் இந்த படம் வைரலாக பரவியது. இதனையறிந்த போலீசார் தலைகீழாக பறந்த தேசிய கொடியை கீழே இறக்கி மீண்டும் சரியாக ஏற்றி வைத்தனர்.
இந்த சம்பவம் வேலூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தினர்.
தேசியகொடி தலைகீழாக ஏற்றியது தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு பர்வேஸ்குமார் வாணியம்பாடி டி.எஸ்.பி. முரளிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். அதில் உரிய விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள திம்மாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் நேற்று சுதந்திரதினவிழா கொண்டாடப்பட்டது. போலீசார் தலைகீழாக தேசிய கொடியேற்றி இனிப்பு வழங்கினர்.
இதனை பார்த்த பொதுமக்கள் தலைகீழாக பறந்த தேசிய கொடியை படம் பிடித்து வாட்ஸ்-அப், பேஸ்புக்கில் பரவவிட்டனர். சில மணி நேரத்தில் இந்த படம் வைரலாக பரவியது. இதனையறிந்த போலீசார் தலைகீழாக பறந்த தேசிய கொடியை கீழே இறக்கி மீண்டும் சரியாக ஏற்றி வைத்தனர்.
இந்த சம்பவம் வேலூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தினர்.
தேசியகொடி தலைகீழாக ஏற்றியது தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு பர்வேஸ்குமார் வாணியம்பாடி டி.எஸ்.பி. முரளிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். அதில் உரிய விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.