செய்திகள்

தேனி அருகே மனைவியை கொடுமைபடுத்திய கணவர் உள்பட 6 பேர் மீது வழக்கு

Published On 2018-08-16 11:07 GMT   |   Update On 2018-08-16 11:07 GMT
தேனி அருகே மனைவியை கொடுமைபடுத்திய கணவர் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி:

தேவாரம் தெற்கு தெருவைச் சேர்ந்த முருகேசன் மகன் ராஜா (வயது 33). இவருக்கும் ஆர்த்தி (29) என்பவருக்கும் கடந்த 7.6.2012-ந் தேதி திருமணம் நடந்தது. திருமணத்தின் போது 61 பவுன் நகை, ரூ.5 லட்சம் மதிப்பிலான சீர் வரிசைகள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது.

திருமணமாகி சில மாதங்களிலேயே ஆர்த்தியின் 25 பவுன் நகையை தொழில் தொடங்குவதற்காக தருமாறு கேட்டு வாங்கிக் கொண்டனர். மேலும் சில மாதங்கள் கழித்து மற்ற நகைகளையும் வாங்கி விற்று விட்டனர்.

இது தவிர அவரது வீட்டில் இருந்து ரூ.5 லட்சம் தொழில் தொடங்குவதற்காக ஆர்த்தி வாங்கி கொடுத்துள்ளார். இவை அனைத்தையும் பெற்றுக் கொண்டு புதிதாக தொடங்கிய கம்பெனியை தனது பெயரில் வைக்காமல் தனது வீட்டில் உள்ளவர்கள் பெயரில் மதன்ராஜ் வைத்துள்ளார்.

இது குறித்து ஆர்த்தி கேட்டபோது அவரை வெற்று பத்திரத்தில் கையெழுத்து போடச் சொல்லி கொடுமைபடுத்தியுள்ளனர். இதனால் ஆர்த்தி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனிடம் புகார் அளித்தார்.

எஸ்.பி. உத்தரவின் பேரில் போடி அனைத்து மகளிர் போலீசார் மனைவியை கொடுமைபடுத்திய கணவர் மதன்ராஜ், மாமனார் முருகேசன், மாமியார் மகேஸ்வரி, மற்றும் சுதர்சன், கிஷோர்குமார், கார்த்தி ஆகிய 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News