செய்திகள்

அரியலூரில் சுதந்திர தின விழா அணிவகுப்பு ஒத்திகை

Published On 2018-08-14 14:47 GMT   |   Update On 2018-08-14 14:47 GMT
சுதந்திர தின விழாவையொட்டி அரியலூரில் மாநகர போலீசார், ஆயுதப்படை போலீசார் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.
அரியலூர்:

சுதந்திர தின விழா வருகிற 15-ந்தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி அரியலூர் விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், கலெக்டர் விஜயலட்சுமி தலைமை தாங்கி, தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்த உள்ளார். காவல் துறையினர், தீயணைப்பு, தேசிய மாணவர் படையினரின் கண்கவர் அணிவகுப்புகளும், பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.

இதையொட்டி சுதந்திர தின ஒத்திகை நிகழ்ச்சி நேற்று விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. மாநகர போலீசார், ஆயுதப்படை போலீசார் அணிவகுப்பு, என்.சி.சி. மாணவர்கள், என்.எஸ்.எஸ். மாணவிகள் ஒத்திகையில் ஈடுபட்டனர். சுதந்திர தினத்தையொட்டி மாவட்ட விளையாட்டு அரங்கில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Tags:    

Similar News