செய்திகள்

கடலூரில் ரெயில் முன்பாய்ந்து பிளஸ்-1 மாணவர் தற்கொலை

Published On 2018-08-14 10:12 GMT   |   Update On 2018-08-14 10:12 GMT
கடலூரில் தேர்வில் தோல்வி அடைந்ததால் பிளஸ்-1 மாணவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர்:

கடலூர் புதுப்பாளையம் சஞ்சீவராயன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரமேஷ்பாபு. இவரது மகன் சூரியகுமார் (வயது 17). இவர் கடலூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பிளஸ்-1 படித்து வந்தார்.

சமீபத்தில் நடத்தப்பட்ட தேர்வில் பல பாடங்களில் தோல்வி அடைந்தார். அதைத்தொடர்ந்து அவர் மீண்டும் தேர்வை எழுதினார். அதிலும் அவரால் தேர்ச்சி பெற முடியவில்லை.

இதனால் சூரியகுமார் மனவேதனையில் இருந்தார். அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். நேற்று இரவு வீட்டில் இருந்து வெளியே சென்றார். பின்னர் திருப்பாதிரிப்புலியூர் ரெயில் தண்டவாளம் அருகே சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக ஒரு ரெயில் வேகமாக வந்தது. அதன் முன்பு சூரியகுமார் பாய்ந்தார். இதில் உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த முதுநகர் ரெயில்வே போலீசார் அங்கு விரைந்து சென்று சூரியகுமாரின் உடலை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News