என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » student suicide in cuddalore
நீங்கள் தேடியது "student suicide in cuddalore"
கடலூரில் தேர்வில் தோல்வி அடைந்ததால் பிளஸ்-1 மாணவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர்:
கடலூர் புதுப்பாளையம் சஞ்சீவராயன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரமேஷ்பாபு. இவரது மகன் சூரியகுமார் (வயது 17). இவர் கடலூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பிளஸ்-1 படித்து வந்தார்.
சமீபத்தில் நடத்தப்பட்ட தேர்வில் பல பாடங்களில் தோல்வி அடைந்தார். அதைத்தொடர்ந்து அவர் மீண்டும் தேர்வை எழுதினார். அதிலும் அவரால் தேர்ச்சி பெற முடியவில்லை.
இதனால் சூரியகுமார் மனவேதனையில் இருந்தார். அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். நேற்று இரவு வீட்டில் இருந்து வெளியே சென்றார். பின்னர் திருப்பாதிரிப்புலியூர் ரெயில் தண்டவாளம் அருகே சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக ஒரு ரெயில் வேகமாக வந்தது. அதன் முன்பு சூரியகுமார் பாய்ந்தார். இதில் உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த முதுநகர் ரெயில்வே போலீசார் அங்கு விரைந்து சென்று சூரியகுமாரின் உடலை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடலூர் புதுப்பாளையம் சஞ்சீவராயன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரமேஷ்பாபு. இவரது மகன் சூரியகுமார் (வயது 17). இவர் கடலூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பிளஸ்-1 படித்து வந்தார்.
சமீபத்தில் நடத்தப்பட்ட தேர்வில் பல பாடங்களில் தோல்வி அடைந்தார். அதைத்தொடர்ந்து அவர் மீண்டும் தேர்வை எழுதினார். அதிலும் அவரால் தேர்ச்சி பெற முடியவில்லை.
இதனால் சூரியகுமார் மனவேதனையில் இருந்தார். அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். நேற்று இரவு வீட்டில் இருந்து வெளியே சென்றார். பின்னர் திருப்பாதிரிப்புலியூர் ரெயில் தண்டவாளம் அருகே சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக ஒரு ரெயில் வேகமாக வந்தது. அதன் முன்பு சூரியகுமார் பாய்ந்தார். இதில் உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த முதுநகர் ரெயில்வே போலீசார் அங்கு விரைந்து சென்று சூரியகுமாரின் உடலை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X