செய்திகள்
காவேரிப்பாக்கம் அருகே ஏரியில் மூழ்கி தொழிலாளி பலி
காவேரிப்பாக்கம் அருகே மீன் பிடிக்க சென்ற தொழிலாளி ஏரியில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
அரக்கோணம்:
காவேரிப்பாக்கம் அடுத்த கொண்டாபுரத்தை சேர்ந்தவர் சுந்தர் (வயது40). கூலி தொழிலாளி இவரது மனைவி யாசினி. இவர்களுக்கு 3 மகள்கள், 1 மகன் உள்ளனர்.
சுந்தர் நேற்று அதிகாலை அதே பகுதியில் உள்ள கண்ணங்குளத்தில் மீன் பிடிக்க செல்வதாக கூறி வீட்டை விட்டு சென்றார். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த சுந்தரின் மனைவி யாசினி கண்ணங்குளத்திற்கு சென்று பார்த்தார். அப்போது சுந்தர் பிணம் குளத்தில் மிதந்தது.
இதுகுறித்து காவேரிப்பாக்கம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ராணிப்பேட்டை தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் சுந்தரின் உடலை போராடி மீட்டு வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.