செய்திகள்

சேலத்தில் குழந்தையுடன் இளம்பெண் மாயம்

Published On 2018-08-12 12:43 GMT   |   Update On 2018-08-12 12:43 GMT
சேலத்தில் குழந்தையுடன் இளம்பெண் மாயமானது குறித்து அவரது கணவர் போலீசில் புகார் செய்தார். போலீசார் இவர்களை தேடி வருகிறார்கள்.

சேலம்:

சேலம், சூரமங்கலம் அருகே உள்ள நரசோதிப்பட்டி ரெட்டியூரை சேர்ந்தவர் சம்பத். எலெக்ட்ரீசியன். இவரது மனைவி சரண்யா (வயது 28). இவர்களுக்கு நிக்‌ஷதா என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்பத்தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று அவர்களுக்கு மீண்டும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.

இதனால் சரண்யா கடந்த 7-ந் தேதி கோபித்துக்கொண்டு மகள் நிக்‌ஷதாவை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றார். பல மணி நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த அவரது கணவர் சம்பத் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. 

இது குறித்து சூரமங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சரண்யாவுக்கும், சம்பத்துக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும், தான் நினைத்த வாழ்க்கை கிடைக்கவில்லை என்ற ஏக்கத்திலும் மகளுடன் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறியதும் தெரியவந்தது.

காணாமல் போன அன்று சரண்யா கருப்பு நிற சுடிதாரும், நிக்‌ஷதா மஞ்சள் நிற பிராக்கும் அணிந்திருந்தனர். இவர்களை போலீசார் தேடி வருகின்றனர். இவர்களை பற்றி தகவல் தெரிந்தால் சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் தகவல் கொடுக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News