செய்திகள்

குடும்பத்துடன் வி‌ஷம் குடித்த தொழில் அதிபரிடம் கந்து வட்டி கேட்டு மிரட்டலா? போலீசார் தீவிர விசாரணை

Published On 2018-08-11 12:10 GMT   |   Update On 2018-08-11 12:10 GMT
கோவையில் குடும்பத்துடன் விஷம் குடித்த தொழில் அதிபரிடம் யாராவது கந்து வட்டி கேட்டு மிரட்டி நெருக்கடி கொடுத்தார்களா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:

கோவை குனியமுத்தூர் அய்யப்பன் நகரை சேர்ந்தவர் ஜானகிராமன் (வயது 44). இவர் பெண்களுக்கான உள்ளாடை தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார்.

இவரது மனைவி சசிகலா (36). இவர்களுக்கு சினேகா (16), ஹேமாவர்ணா (14) என்ற 2 மகள்கள் உள்ளனர்.

ஜானகி ராமன் தனது தொழில் தேவைக்காக பலரிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் தொழிலில் போதிய வருமானம் இல்லாததல் கடனை திருப்பி கொடுக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டார்.

இதனால் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்த ஜானகி ராமன் குடும்பத்துடன் தற்கொலை செய்வது என முடிவு செய்தார்.

அதன்படி தனது குடும்பத்தினருடன் பாலில் பூச்சி கொல்லி மருந்தை கலந்து குடித்தார். பின்னர் தனது உறவினர்களுக்கு குடும்பத்துடன் தற்கொலை செய்வதாக செல்போன் மூலம் கூறி உள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனடியாக ஜானகிராமன் வீட்டுக்கு விரைந்து வந்து பூச்சி மருந்து குடித்து மயங்கிய நிலையில் கிடந்த 4 பேரையும் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனளிக்காமல் ஜானகிராமனின் மனைவி சசிகலா பரிதாபமாக இறந்தார். ஜானகிராமன், அவரது மகள்கள் சினேகா, ஹேமாவர்ணா ஆகியோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இது குறித்து குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கடன் தொல்லை காரணமாக ஜானகிராமன் குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.

ஜானகிராமன் தனது தொழில் தேவைக்காக யார்? யாரிடமெல்லாம் வட்டிக்கு பணம் வாங்கினார். அவர்களில் யாராவது ஜானகி ராமனிடம் கந்து வட்டி கேட்டு மிரட்டி நெருக்கடி கொடுத்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் ஜானகிராமனிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
Tags:    

Similar News