செய்திகள்

எதிர்கால சந்ததியினருக்காக பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்- கலெக்டர் அறிவுரை

Published On 2018-08-11 10:50 GMT   |   Update On 2018-08-11 10:50 GMT
திருப்பத்தூர் பேரூராட்சி அலுவலகப் பதிவேடு மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு உரப்பூங்காவில் திடக்கழிவு மேலாண்மை குறித்து கலெக்டர் லதா ஆய்வு மேற்கொண்டார்.

திருப்பத்தூர்:

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பேரூராட்சி அலுவலகப் பதிவேடு மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு உரப்பூங்காவில் திடக்கழிவு மேலாண்மை குறித்து கலெக்டர் லதா ஆய்வு மேற்கொண்டார்.

திருப்பத்தூர் பேரூராட்சி அலுவலகத்திற்கு வருகை தந்த கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பணிப்பதிவேடுகள் குறித்து ஆய்வு செய்து குடிநீர், சுகாதாரம், சாலை வசதி, மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து செயல் அலுவலர் சண்முகத்திடம் கேட்டறிந்தார்.

பின்னர் தெருவிளக்கு பராமரிப்பு பதிவேட்டினை ஆய்வு செய்தார். தொடர்ந்து 18 வார்டுகளிலும் மக்கும் மக்கா குப்பைகள் எனப் பிரித்து வாங்கப்படுகிறதா? எனக் கேட்டறிந்தார். தொடர்ந்து பேரூராட்சி அலுவலக வணிக வளாகக் கடைகளிலும் உழவர்சந்தை உள்ளிட்ட இடங்களில் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுகிறதா? என ஆய்வு செய்து பொதுமக்களிடம் உங்களின் வருங்கால சந்ததிகளுக்காக பிளாஸ்டிக் பயன் படுத்துவதை தவிர்க்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

திடக்கழிவு மேலாண் மைப் பணிகளை ஆய்வு செய்வதற்காக சிவகங்கை சாலையில் உள்ள பேரூராட்சி உரக்கிடங்கு பகுதிக்குச் சென்று அங்கு குப்பைகள் பிரிக்கப்படுவதையும் பிளாஸ்டிக் அரைப்பு எந்திரைத்தையும் பார்வையிட்டு துப்புரவு மேற்பார்வையாளர் தங்கதுரையிடம் உரம் தயாரிக் கப்படும் உரப்படுக்கை முறையினையும் அவற்றை சந்தைப்படுத்துதல் முறை குறித்தும் விளக்கினார்.

பின்னர் அதே பகுதியில் கோழிக்கழிவுகள் உர மாக்கப்படுவதையும் பார்வையிட்ட கலெக்டர் லதா, இந்தப்பகுதியில் காய்கறித் தோட்டம் ஆரம்பிக்கச் செய்து அதனை பயனாளிகளே அனுபவிக்க கேட்டுக் கொண்டார்.

இந்த ஆய்வின் போது பேரூராட்சியின் உதவி இயக்குனர் ராஜா, உதவிப் பொறியாளர் பாலசுப் பிரமணியன், பணி மேற்பார்வையாளர் சந்திரமோகன், உதவி செயற்பொறியாளர் குமரகுரு ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News