செய்திகள்

திருநீர்மலையில் பிளஸ்-1 மாணவி தற்கொலை: போலீசார் விசாரணை

Published On 2018-08-09 09:06 GMT   |   Update On 2018-08-09 09:06 GMT
திருநீர்மலையில் குண்டாக இருப்பதாக கூறி மாணவர்கள் கிண்டல் செய்ததால் பிளஸ்-1 மாணவி உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
தாம்பரம்:

திருநீர்மலை. ரங்காநகர் 3-வது தெருவை சேர்ந்தவர் ரமேஷ்பாபு. இவரது மகள் கல்பனா (வயது 14). குரோம்பேட்டையில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

கல்பனாவின் உடல் சற்று குண்டாக இருந்ததாக தெரிகிறது. இதுபற்றி உடன் படிக்கும் மாணவிகள் சிலர் கிண்டல் அடித்தனர்.

இதனால் மனவேதனை அடைந்த அவர் இதுகுறித்து பெற்றோரிடம் கூறி வருத்தம் அடைந்தார். அவர்கள் கல்பனாவுக்கு ஆறுதல் கூறி பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் சோகத்தில் இருந்த கல்பனா நேற்று இரவு தனது உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்தார். உடல் கருகிய அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி கல்பனா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சங்கர்நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News