செய்திகள்
திமுகவினர் கட்டுப்பாடு காக்க வேண்டும் - ஸ்டாலின் தொண்டர்களுக்கு வேண்டுகோள்
திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலைக்குறைவால் இன்று காலமான நிலையில், திமுகவினர் கட்டுப்பாடு காக்க வேண்டும் என மு.க ஸ்டாலின் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். #RIPKalaignar #Karunanidhi #கலைஞர்
சென்னை:
காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை காலமானார். இதனை அடுத்து, ஜனாதிபதி, பிரதமர் உள்பட பல தலைவர்கள் அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கருணாநிதியின் நீங்கா புகழை என்றெண்டும் நிலைத்திருக்க வேண்டும் எனவும், திமுக தொண்டர்கள் கட்டுப்பாடு காக்க வேண்டும் எனவும் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த துயர சூழலில் கழகத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் சிலர் செயல்படலாம் அவர்களை அடையாளம் கண்டு காவல்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.