செய்திகள்
பல லட்சம் ரூபாய் முறைகேடு புகார் எதிரொலி- மாதனூர் ஊராட்சி ஒன்றிய ஆபீசில் 4 பேர் இடமாற்றம்
மாதனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பல லட்சம் ரூபாய் முறைகேடு புகார் தொடர்பாக 4 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ஆம்பூர்:
மாதனூர் ஊராட்சி ஒன்றியத்தில் பசுமை வீடுகள், இந்திரா நினைவு குடியிருப்பு மற்றும் தனி நபர் கழிப்பறை திட்டங்களிலும், அதேபோல் அரசு திட்டங்களுக்கு மாதனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்த இரும்பு கம்பிகள், அலுவலக வளாகத்தில் இருந்த தேக்கு மரங்களை முறைகேடாக விற்பனை செய்தும், நடைபெறாத திட்டப்பணிகளுக்கு நடந்தது போல் கோப்புகள் தயாரித்து அதற்குரிய பணத்தை முறைகேடாக எடுத்து கொண்டது என்பது உள்பட பல்வேறு புகார்கள் ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து சென்றது.
இந்த நிலையில் கடந்த வாரம் மாவட்ட கலெக்டர் ராமன் மாதனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு சென்று திடீரென ஆய்வு நடத்தினார். இந்த ஆய்வில் மாவட்ட தணிக்கைப்பிரிவு உதவி இயக்குனர் அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணிபுரிந்த மோகன், மாதனூரில் ஒன்றிய ஆணையாளராக பணிபுரிந்த போது எழுந்த பல்வேறு முறைகேடுகள் புகார் தொடர்பாக, தணிக்கை ஆட்சேபனைகளுக்கு உரிய விளக்கம் அளிக்காமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் ஓய்வுபெற இருந்த நிலையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
அதன் தொடர்ச்சியாக முறைகேடு புகார் எதிரொலியாகவும், ஒன்றியத்தில் பணிபுரியும் அனைவரையும் ஒட்டுமொத்தமாக இடமாற்றம் செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்ததை தொடர்ந்தும் தற்போது மாதனூர் ஒன்றியத்தில் பணிபுரியும் பலர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி, மாதனூர் ஒன்றியத்தில் பதிவறை எழுத்தராக இருந்த மணிகண்டன் ஜோலார்பேட்டை ஒன்றியத்துக்கும், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தமிழரசன் கணியம்பாடி ஒன்றியத்துக்கும், அலுவலக உதவியாளர்கள் செல்வம் நாட்டறம்பள்ளி ஒன்றியத்துக்கும், சுந்தர் குடியாத்தம் ஒன்றியத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இடமாற்றம் செய்யப்பட்டவர்கள் இன்று (திங்கட்கிழமை) அந்தந்த ஒன்றியத்துக்கு சென்று பணியில் சேர வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மாதனூர் ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றும் மேலும் சில அலுவலர்கள் மீதும், திருப்பத்தூர் கோட்ட அலுவலக அதிகாரிகள் மீதும் பல லட்சம் ரூபாய் முறைகேடு புகார்கள் கூறப்படுகிறது. இதனால் இன்னும் ஓரிரு நாளில் அவர்களும் இடமாற்றம் செய்யப்படலாம் என தெரிகிறது. இந்த சம்பவம் மாதனூர் ஒன்றிய அலுவலர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
மாதனூர் ஊராட்சி ஒன்றியத்தில் பசுமை வீடுகள், இந்திரா நினைவு குடியிருப்பு மற்றும் தனி நபர் கழிப்பறை திட்டங்களிலும், அதேபோல் அரசு திட்டங்களுக்கு மாதனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்த இரும்பு கம்பிகள், அலுவலக வளாகத்தில் இருந்த தேக்கு மரங்களை முறைகேடாக விற்பனை செய்தும், நடைபெறாத திட்டப்பணிகளுக்கு நடந்தது போல் கோப்புகள் தயாரித்து அதற்குரிய பணத்தை முறைகேடாக எடுத்து கொண்டது என்பது உள்பட பல்வேறு புகார்கள் ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து சென்றது.
இந்த நிலையில் கடந்த வாரம் மாவட்ட கலெக்டர் ராமன் மாதனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு சென்று திடீரென ஆய்வு நடத்தினார். இந்த ஆய்வில் மாவட்ட தணிக்கைப்பிரிவு உதவி இயக்குனர் அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணிபுரிந்த மோகன், மாதனூரில் ஒன்றிய ஆணையாளராக பணிபுரிந்த போது எழுந்த பல்வேறு முறைகேடுகள் புகார் தொடர்பாக, தணிக்கை ஆட்சேபனைகளுக்கு உரிய விளக்கம் அளிக்காமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் ஓய்வுபெற இருந்த நிலையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
அதன் தொடர்ச்சியாக முறைகேடு புகார் எதிரொலியாகவும், ஒன்றியத்தில் பணிபுரியும் அனைவரையும் ஒட்டுமொத்தமாக இடமாற்றம் செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்ததை தொடர்ந்தும் தற்போது மாதனூர் ஒன்றியத்தில் பணிபுரியும் பலர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி, மாதனூர் ஒன்றியத்தில் பதிவறை எழுத்தராக இருந்த மணிகண்டன் ஜோலார்பேட்டை ஒன்றியத்துக்கும், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தமிழரசன் கணியம்பாடி ஒன்றியத்துக்கும், அலுவலக உதவியாளர்கள் செல்வம் நாட்டறம்பள்ளி ஒன்றியத்துக்கும், சுந்தர் குடியாத்தம் ஒன்றியத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இடமாற்றம் செய்யப்பட்டவர்கள் இன்று (திங்கட்கிழமை) அந்தந்த ஒன்றியத்துக்கு சென்று பணியில் சேர வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மாதனூர் ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றும் மேலும் சில அலுவலர்கள் மீதும், திருப்பத்தூர் கோட்ட அலுவலக அதிகாரிகள் மீதும் பல லட்சம் ரூபாய் முறைகேடு புகார்கள் கூறப்படுகிறது. இதனால் இன்னும் ஓரிரு நாளில் அவர்களும் இடமாற்றம் செய்யப்படலாம் என தெரிகிறது. இந்த சம்பவம் மாதனூர் ஒன்றிய அலுவலர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews