செய்திகள்

சீர்காழி அருகே பட்டதாரி மாணவி மாயம்

Published On 2018-08-06 09:48 GMT   |   Update On 2018-08-06 09:48 GMT
சீர்காழி அருகே பட்டதாரி மாணவி மாயம் ஆனது தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.
சீர்காழி:

நாகை மாவட்டம் சீர்காழி அடுத்த திருமுல்லைவாசல் மேலநெடுந்தெருவை சேர்ந்தவர் அப்துல் ரசாக். இவரது மகள் ஹைசா மைமூ (வயது 23). இவர் பி.காம். படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 29-ந்தேதி ஹைசா மைமூ வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் மகளை பல இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் காணவில்லை.

இதுபற்றி சீர்காழி போலீசில் தந்தை அப்துல் ரசாக் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான ஹைசா மைமூவை தேடி வருகின்றனர்.

ஹைசா மைமூ வீட்டை விட்டு எதற்காக சென்றார்? எங்கு சென்றார் என்று போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
Tags:    

Similar News