செய்திகள்

பரங்கிமலை ரெயில் விபத்தின் எதிரொலி - பழவந்தாங்கலில் ரெயில்வே தடுப்புகள் அகற்றம்

Published On 2018-08-06 09:08 GMT   |   Update On 2018-08-06 09:08 GMT
சென்னை பழவந்தாங்கல் பகுதியில் அமைந்துள்ள ரெயில்வே தண்டவாளத்தின் தடுப்புச் சுவரை ரெயில்வே பொதுமேலாளரின் உத்தரவின் பேரில் அகற்றப்பட்டுள்ளன.
சென்னை:

சென்னை பரங்கிமலையில் கடந்த மாதம் மின்சார ரெயிலில் படியில் பயணம் செய்தவர்கள் ரெயில்வே தடுப்புகளில் மோதி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்வலைகளையும் கண்டனங்களையும் உருவாக்கியது. மேலும், ரெயில்வே தடுப்புகளை அகற்றுமாறு ரெயில்வே துறை அதிகாரிகாளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.



இந்நிலையில், தெற்கு ரயில்வே பொதுமேலாளரின் உத்தரவின் பேரில், பழவந்தாங்கல் ரெயில்நிலையத்தில் உள்ள பக்கவாட்டு தடுப்புச் சுவர்கள் தற்போது அகற்றப்பட்டுள்ளன. மேலும், ரெயில் நிலையங்களில் உள்ள அபாயகரமான தடுப்புச் சுவர்களை அகற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், விரைவில், பல்வேறு ரெயில் நிலையங்களில் உள்ள அபாயகரமான பக்கவாட்டு தடுப்புச் சுவர்கள் அகற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, இந்த நடவடிக்கைக்கு காரணமாக இருந்த பரங்கிமலை விபத்து உண்டான அந்த தடுப்புச் சுவர் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதால், அந்த ஆய்வின் அடிப்படையில் அந்த பக்கவாட்டு தடுப்புச் சுவரும் நீக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News