செய்திகள்
சென்னை விமானத்தில் ரூ.22 லட்சம் தங்கம் கடத்தல் - பயணியிடம் விசாரணை
சென்னை விமான நிலையத்தில் இன்று அதிகாலை பக்ரைனில் இருந்து வந்த பயணியிடம் ரூ.22 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. #goldsmuggling
ஆலந்தூர்:
பக்ரைனில் இருந்து இன்று அதிகாலை சென்னைக்கு விமானம் வந்தது. விமானத்தில் பயணிகள் கொண்டு வந்த உடமைகளை சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது திடீரென்று சுங்கத்துறை எல்லையை வேகமாக கடந்து செல்ல முயன்ற பயணி ஒருவரை மடக்கி அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசினார்.
அவர் வைத்திருந்த சூட்கேசை திறந்து சோதனை நடத்தினார்கள். அதில் ஒரு அட்டைப் பெட்டி இருந்தது. அதனுள் அலுமினியம் ஷீட் ஒன்று இருந்தது. அதை பிரித்து பார்த்தபோது 700 கிராம் தங்கம் கடத்தியது தெரிய வந்தது. அதன் மதிப்பு ரூ.22 லட்சம் ஆகும்.
விசாரணையில் அவர் சென்னையைச் சேர்ந்த ஹைடுரூஸ் (வயது34) என்று தெரிய வந்தது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. #goldsmuggling