செய்திகள்

புதுக்கோட்டை அருகே கோவில் விழாவில் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய 4 பேர் கைது

Published On 2018-08-05 15:34 GMT   |   Update On 2018-08-05 15:34 GMT
புதுக்கோட்டை அருகே கருமாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சப் இன்ஸ்பெக்டரை தாக்கிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
அறந்தாங்கி:

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் அருகே உள்ள அய்யம்பட்டினம் கருமாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி நேற்றிரவு இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற அப்பகுதியை சேர்ந்த முத்து (வயது 35), ரமேஷ்(23), துரை (22), பழனி(23)ஆகியோர் குடிபோதையில் ஆடிப்பாடி தகராறு செய்ததாக கூறப்படுகிறது. 

இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஜெகதாப்பட்டினம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மலையரசன் , அமைதியாக இருந்து நிகழ்ச்சியை பார்க்குமாறு தெரிவித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த 4பேரும், மலையரசனை தாக்கியதோடு, அங்கு நின்ற போலீஸ் வாகனத்தின் கண்ணாடியையும் அடித்து நொறுக்கினர். இதுபற்றி மலையரசன் ஜெகதாப்பட்டினம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் கோட்டைப்பட்டினம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சரவணன் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தார். 
Tags:    

Similar News