செய்திகள்

கடலூரில் கல்லூரி மாணவி வி‌ஷம் குடித்து தற்கொலை

Published On 2018-08-04 15:41 IST   |   Update On 2018-08-04 15:41:00 IST
கடலூரில் வயிற்று வலி காரணமாக கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:

கடலூர் கோண்டூர் பகுதியை சேர்ந்தவர் தமிழ்செல்வன். இவரது மகள் யோக மாலினி(வயது19). இவர் கடலூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. 2-ம் ஆண்டுபடித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று மாலையில் வீட்டில் இருந்த யோக மாலினி திடீரென்று வி‌ஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனிக்காமல் இன்று காலை யோகமாலினி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து கடலூர் புதுநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் மாணவி யோகமாலினிக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டு வந்துள்ளது. இதற்காக அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் நோய் குணமாகவில்லை. இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

Tags:    

Similar News