செய்திகள்
சொத்துவரி உயர்வை கண்டித்து தே.மு.தி.க. ஆர்ப்பாட்டம்
சொத்துவரி உயர்வை கண்டித்து நகராட்சி அலுவலகங்கள் முன்பு இன்று தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தாம்பரம்:
சொத்துவரி உயர்வை கண்டித்து நகராட்சி அலுவலகங்கள் முன்பு இன்று தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அனகாபுத்தூர் நகராட்சி அலுவலகம் முன்பு காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட தே.மு.தி.க. சார்பில் மாவட்ட செயலாளர் அனகை முருகேசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நகர செயலாளர் மகாதேவன் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதுபோல பம்மல் நகராட்சி முன்பு நகர செயலாளர் ஜெயபிரகாஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சொத்துவரி உயர்வை கண்டித்து நகராட்சி அலுவலகங்கள் முன்பு இன்று தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அனகாபுத்தூர் நகராட்சி அலுவலகம் முன்பு காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட தே.மு.தி.க. சார்பில் மாவட்ட செயலாளர் அனகை முருகேசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நகர செயலாளர் மகாதேவன் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதுபோல பம்மல் நகராட்சி முன்பு நகர செயலாளர் ஜெயபிரகாஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.