செய்திகள்

மதுரையில் வங்கியில் போலி ஆவணம் கொடுத்து ரூ.3 கோடி மோசடி

Published On 2018-08-03 08:17 GMT   |   Update On 2018-08-03 08:17 GMT
மதுரையில் வங்கியில் போலி ஆவணம் கொடுத்து ரூ.3 கோடி மோசடியில் ஈடுபட்ட கணவன், மனைவி உள்பட 3 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மதுரை:

மதுரை பாண்டியன் கிராம வங்கி மண்டல மேலாளர் சோமசுந்தரம் மாநகர் குற்றப்பிரிவு போலீசில் புகார் மனு கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

மதுரைரையச் சேர்ந்த ஜெயராஜ் அவரது மனைவி மங்களம் ஆகியோர் அரசரடியில் உள்ள எங்களது வங்கி கிளையில் சில ஆண்டுகளுக்கு முன்பு தனித்தனியாக கணக்கு வைத்திருந்தனர். இதில் ஜெயராஜ் ரூ.1 கோடியே 48 ஆயிரமும், மங்களம் ரூ.1 கோடியே 47 ஆயிரமும் டெபாசிட் செய்து இருந்தனர். இந்த நிலையில் அவர்கள் இருவரும் இறந்து விட்டனர். அவர்களது பணம் வங்கியிலேயே இருந்தது.

இந்த நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு ஜெயராஜ்-மங்களத்தின் மகள் சுகாசினி தனது பெற்றோரின் பணத்தை எடுப்பதற்காக போலியாக வாரிசு, இறப்பு சான்றிதழ்களை தயாரித்து அரசரடி வங்கி கிளையில் கொடுத்துள்ளார். இதற்கு அவரது கணவர் டேவிட் பிரதாப் சிங், அப்போது பணியில் இருந்த வங்கி உதவி மேலாளர் பாலசந்தர் என்பவரும் உடந்தையாக இருந்துள்ளனர்.

சமீபத்தில் வங்கி கணக்குகளை தணிக்கை செய்தபோது இந்த மோசடி தெரியவந்தது. எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த புகாரின் அடிப்படையில் சுகாசினி, அவரது கணவர், வங்கி மேலாளர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
Tags:    

Similar News