செய்திகள்

போலீஸ் நிலையம் முன்பு 3 மகள்களுடன் தாய் தீக்குளிக்க முயற்சி

Published On 2018-08-01 16:01 IST   |   Update On 2018-08-01 16:01:00 IST
வாணியம்பாடி அருகே போலீஸ் நிலையம் முன்பு 3 மகள்களுடன் தாய் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
வாணியம்பாடி:

வாணியம்பாடி அருகே உள்ள சொரக்காயல்நத்தம் பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 45) விவசாயி. இவரது தம்பி ராமச்சந்திரன் இவர்களுக்கு சொந்தமாக 4 ஏக்கர் நிலம் உள்ளது.

நிலம் பாகம் பிரிப்பதில் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இது குறித்து ஜெயக்குமார் திம்மம்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் ராமச்சந்திரன் தனது நண்பர்களுடன் சேர்ந்து நேற்று ஜெயக்குமாரிடம் தகராறு செய்து, அவரை சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த ஜெயக்குமார் வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் இன்று காலை ஜெயக்குமாரின் மனைவி அமிர்தசெல்வி (37). தனது 3 மகள்களுடன் திம்மம்பேட்டை போலீஸ் நிலையம் முன்பு சென்று ராமச்சந்திரன் மீது நடவடிக்கை எடுக்ககோரி 3 மகள்கள் மீதும் தன் மீதும் மண்ணெண்னை ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

இதனை கண்ட போலீசார் அமிர்தசெல்வியிடம் இருந்து மண்ணெண்னை கேனை பறித்து தீக்குளிப்பை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews
Tags:    

Similar News