செய்திகள்
அருப்புக்கோட்டை அருகே நாய்கள் கடித்து குதறியதில் மான் பலி
அருப்புக்கோட்டை அருகே நாய்கள் கடித்து குதறியதில் மான் சிகிச்சை பலனின்றி பலியானது.
அருப்புக்கோட்டை:
அருப்புக்கோட்டை அருகேயுள்ள சின்னான்செட்டிப்பட்டி கிராமத்துக்குள் நேற்றுமுன்தினம் இரவு ஒரு புள்ளிமான் வந்துள்ளது. அதனை நாய்கள் விரட்டியுள்ளன. சத்தம் கேட்டு எழுந்த கிராமத்தினர் நாய்களை அங்கிருந்து விரட்டிவிட்டுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று காலை ஊருக்கு வெளியே முட்புதருக்குள் புள்ளிமான் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தது. அதன் உடலில் நாய்கள் கடித்த காயங்கள் இருந்தன. இது குறித்து பந்தல்குடி போலீசாருக்கு கிராமத்தினர் தகவல் கொடுத்தனர். போலீசார், கால்நடை டாக்டர் சத்யபாமாவை அழைத்து வந்து மானுக்கு சிகிச்சை அளித்தனர். எனினும் அதனை காப்பாற்ற இயலவில்லை. மான் இறந்துபோனது குறித்து வனத்துறையினருக்கு போலீசார் தகவல் கொடுத்தனர். உயிரிழந்த அந்த ஆண் மானுக்கு 2½ வயது இருக்கும் என்று டாக்டர் தெரிவித்தார்.
அருப்புக்கோட்டை அருகேயுள்ள சின்னான்செட்டிப்பட்டி கிராமத்துக்குள் நேற்றுமுன்தினம் இரவு ஒரு புள்ளிமான் வந்துள்ளது. அதனை நாய்கள் விரட்டியுள்ளன. சத்தம் கேட்டு எழுந்த கிராமத்தினர் நாய்களை அங்கிருந்து விரட்டிவிட்டுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று காலை ஊருக்கு வெளியே முட்புதருக்குள் புள்ளிமான் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தது. அதன் உடலில் நாய்கள் கடித்த காயங்கள் இருந்தன. இது குறித்து பந்தல்குடி போலீசாருக்கு கிராமத்தினர் தகவல் கொடுத்தனர். போலீசார், கால்நடை டாக்டர் சத்யபாமாவை அழைத்து வந்து மானுக்கு சிகிச்சை அளித்தனர். எனினும் அதனை காப்பாற்ற இயலவில்லை. மான் இறந்துபோனது குறித்து வனத்துறையினருக்கு போலீசார் தகவல் கொடுத்தனர். உயிரிழந்த அந்த ஆண் மானுக்கு 2½ வயது இருக்கும் என்று டாக்டர் தெரிவித்தார்.