செய்திகள்

செந்துறை அருகே இருதரப்பினர் இடையே மோதல் - 4 பேர் கைது

Published On 2018-07-31 14:31 GMT   |   Update On 2018-07-31 14:31 GMT
செந்துறை அருகே முன்விரோதத்தில் இருதரப்பினர் மோதி கொண்டதால் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
செந்துறை:

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள உஞ்சினி வடக்கு தெருவை சேர்ந்தவர் ரெங்கநாதன். அதேபகுதியை சேர்ந்தவர் தர்மலிங்கம். இவர்கள் இருவருக்கும் அப்பகுதியில் விவசாய நிலங்கள் உள்ளது. இந்த நிலங்களில் எல்லை பிரச்சினை சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில் சம்பவத்தன்று இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில், இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில் ரெங்கநாதன் மற்றும் தர்மலிங்கம் மகன் கிருஷ்ணமூர்த்தி (வயது 48) ஆகிய 2 பேர் காயமடைந்தனர். இதில் காயமடைந்த 2 பேரும் அரியலூர், ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

இதுகுறித்து இருதரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் இருப்புலிக்குறிச்சி போலீசார் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அன்பழகன், அவரது தம்பி குணசேகரன் மற்றும் கிருஷ்ணமூர்த்தி, செல்வம் ஆகிய 4 பேரை கைது செய்து ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள மற்ற 3 பேரையும் தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News