செய்திகள்

தந்தையை கொன்றதாக கைதான மகன்- தருமபுரி கிளை சிறையில் அடைப்பு

Published On 2018-07-31 10:35 GMT   |   Update On 2018-07-31 10:35 GMT
மகேந்திரமங்கலம் அருகே மதுகுடித்து விட்டு தகராறில் ஈடுபட்டதால் தந்தையை கொன்றதாக கைதான மகன் தருமபுரி கிளை சிறையில் அடைக்கப்பட்டான்.
பாலக்கோடு:

தருமபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் அருகே கொம்மனூர் கிராமத்தை சேர்ந்தவர் துரைசாமி (வயது 54), பெயிண்டர். இவரது மகன் சூர்யா (33).

துரைசாமிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. அடிக்கடி குடித்துவிட்டு வந்து வீட்டில் உள்ள மகன் மற்றும் உறவினர்களிடம் தகராறு செய்வாராம்.

சம்பவத்தன்று மீண்டும் குடித்துவிட்டு வந்து துரைசாமி தகராறு செய்தார். இதனால் ஆத்திரம் அடைந்த சூர்யா இரும்பு கம்பியை எடுத்து அவரது தலையில் தாக்கினார். தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற துரைசாமி சிகிச்சை பலனின்றி இறந்துபோனார்.

இதுகுறித்து மகேந்திர மங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து தந்தையை கொன்ற மகன் சூர்யாவை கைது செய்து பாலக்கோடு கோர்ட்டில் ஆஜர்படுத்தி தருமபுரி கிளை சிறையில் அடைத்தனர்.

அடிக்கடி குடித்துவிட்டு வந்து தகராறு செய்ததால் தன் தந்தையை கொன்றதாக சூர்யா வாக்குமூலம் கொடுத்து உள்ளார்.
Tags:    

Similar News