செய்திகள்

திருப்பூரில் 108 ஆம்புலன்சில் குழந்தை பெற்ற பெண்

Published On 2018-07-31 08:31 GMT   |   Update On 2018-07-31 08:31 GMT
திருப்பூரில் 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு மருத்துவ உதவியாளர் பிரசவம் பார்த்ததில் அழகான பெண் குழந்தை பிறந்தது.
திருப்பூர்:

திருப்பூர் கல்லாங்காடு திருக்குமரன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுசில். இவருடைய மனைவி கோகிலா (வயது 20). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து கோகிலாவின் உறவினர்கள் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

ஆம்புலன்சில் மருத்துவ உதவியாளர் அருணா உடன் இருந்தார். ஆம்புலன்ஸ் கருப்பன கவுண்டம்பாளையம் அருகே வந்தபோது கோகிலாவுக்கு பிரசவ வலி அதிகமானது. உடனே டிரைவர் வாகனத்தை ரோட்டின் ஓரத்தில் நிறுத்தினார்.

மருத்துவ உதவியாளர் கோகிலாவுக்கு ஆம்புலன்சிலேயே பிரசவம் பார்த்தார். இதில் கோகிலாவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. பின்னர் தாயையும் குழந்தையையும் அதே ஆம்புலன்சில் அழைத்துக் கொண்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றனர். அங்கு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. இருவரும் நலமாக உள்ளனர். ஆம்புலன்சிலேயே பெண்ணுக்கு சுகபிரசவம் பார்த்த மருத்துவ உதவியாளரை உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினார்கள்.
Tags:    

Similar News