செய்திகள்
மருத்துவ முகாம் நடைபெற்ற போது எடுத்தப்படம்.

திருவரங்குளம் அரசு விடுதியில் மருத்துவ முகாம்

Published On 2018-07-30 10:44 GMT   |   Update On 2018-07-30 10:44 GMT
திருவரங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் திருவரங்குளம் அரசினர் மாணவர் விடுதியில் மேல் நிலைப்பள்ளியில் மருத்துவ முகாம் மற்றும் மாணவர் விடுதி சுகாதார ஆய்வுப்பணி நடை பெற்றது.

திருவரங்குளம்:

திருவரங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் திருவரங்குளம் அரசினர் மாணவர் விடுதியில் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முருகையன் தலைமையில் உதவி தலைமை ஆசிரியர் (உயர்நிலை) அன்பழகன் முன்னிலையில் மருத்துவ முகாம் மற்றும் மாணவர் விடுதி சுகாதார ஆய்வுப்பணி நடை பெற்றது.

ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் தம்பிதுரை கலந்துகொண்டு மாணவர் விடுதியில் ஆய்வுப்பணிகளை மேற் கொண்டும் விடுதி மாணவர்கள் 50 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்து மருந்து மாத்திரைகள் வழங்கினார்.

முகாமில் சுகாதார ஆய்வாளர்கள் சந்திரன், வினோத்குமார் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர் விடுதியில் சுகாதார ஆய்வுப் பணிகளை மேற்கொண்டனர். முகாம் ஏற்பாடுகளை விடுதி காப்பாளர் செல்வக்குமார் மற்றும் விடுதிப் பணியாளர்கள் ரவிச்சந்திரன், நாகராஜன் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News