செய்திகள்

மனநல காப்பகத்துக்கு இலவசமாக நிலம் வழங்கிய தி.மு.க. பிரமுகர்

Published On 2018-07-18 09:56 GMT   |   Update On 2018-07-18 09:56 GMT
ராமேசுவரத்தில் மனநல காப்பகத்துக்கு இலவசமாக நிலம் வழங்கிய திமுக பிரமுகரை அப்பகுதி பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
ராமேசுவரம்:

ராமேசுவரம் பகுதிக்கு நாளுக்கு நாள் மன நோயாளிகள் வருகை அதிகரித்து வருகிறது.

இவர்களை பாதுகாக்க போதுமான இட வசதிகள் இல்லாததால் ராமேசுவரம் நகர் முன்னாள் தி.மு.க. செயலாளர் ஜான்பாய் குடும்பத்தினரிடம் ராமேசுவரம் சுவாமி விவேகானந்தர் குடில் சுவாமி பிரணவானந்தர் நிலம் கேட்டு கோரிக்கை வைத்தார்.

அதன் பேரில் ஜான்பாய் தனது குடும்பத்திற்கு சொந்தமான ராமேசுவரம் நகராட்சிக்கு உள்பட்ட செம்மடம் பகுதியில் 18 செண்ட் நிலப்பரப்பை இலவசமாக வழங்க முடிவு செய்தார்.

மனநல காப்பத்திற்கு நிலத்தை அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி ராமேசுவரம் ராமகிருஷ்ணபுரம் பகுதியிலுள்ள சுவாமி விவேகானந்தர் குடில் வளாகத்தில் நடைபெற்றது.

ராமேசுவரம் ராம்கோ பொறுப்பாளார் வேடராஜன் தலைமை தாங்கினார். சுவாமி விவேகானந்தர் குடில் பிரணவானந்தர் வரவேற்றார். காங்கிரஸ் கட்சி நகர் தலைவர் ராஜா மணி முன்னிலை வகித்தார்.

ஜான்பாய், அவரது மனைவி மும்தாஜ் ஆகியோர் மனோலயா நிர்வாக இயக்குனர் மணி கண்டனிடம் நிலம் வழங்குவதற்கான உறுதி தபாலை வழங்கினர்.

பின்னர் நிகழ்ச்சியில் தொடர்ந்து மனநல காப்பகத்தில் தங்கியுள்ள 40-க்கும் மேற்பட்ட மன நோயாளிகளுக்கு புத்தாடை வழங்கினர்.

நிகழ்ச்சியில் முன்னாள் கவுன்சிலர் குமரேசன், மனோலயா முத்துராமன், முருகபூபதி, சமூக ஆர்வலர் தில்லை பாக்கியம், வழக்கறிஞர் ராஜசேகர், ராமகிருஷ்ணபுரம் கிராம தலைவர் நம்பு உள்பட பலர் கலந்து கொண்டனர். #tamilnews
Tags:    

Similar News