செய்திகள்

கரூரில் புத்தகத் திருவிழா தொடக்கம்: துணை சபாநாயகர், அமைச்சர் பங்கேற்பு

Published On 2018-07-15 16:41 GMT   |   Update On 2018-07-15 16:41 GMT
கரூரில் 2-வது புதித்தகத் திருவிழா பிரேம் மஹாலில் தொடங்கியது. இதில் சபாநாயர், அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கரூர்:

கரூர் மாவட்ட பள்ளிக் கல்வித்துறை, மைய நூலகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், பாரதி புத்தகலாலயம் சார்பில் கரூரில் 2-வது புதித்தகத் திருவிழா கரூர் பிரேம் மஹாலில் தொடங்கியது. தொடக்க  விழாவுக்கு கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கினார். கவுரவதலைவர் பி.டி.கோச் தங்கராசு வரவேற்றார். 

இதில் பாராளுமன்ற துணை சபாநாயர் மு.தம்பித்துரை,போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர்  கலந்து கொண்டு புத்தக கண்காட்சியை தொடங்கி வைத்து பேசினர். விழாவில் நூலோர் தொகுத் தவற்றுள் எல்லாம் தலை என்கிற தலைப்பில் கவிஞர் தங்கம் ராமமூர்த்தி பேசினார். இந்த விழாவில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அனந்தநாராயணன்,  நகராட்சி ஆணையர் அசோக்குமார், நூலக அலுவலர் தனலட்சுமி, தமிழ்நாடு அறிவியல் இயக்க செயலாளர் ஜான்பாஷா உள்பட பலர் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. 

இந்த புத்தகத் திருவிழாவில் மொத்தம் 100 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. வருகிற 22-ந்தேதி வரை புத்தகத்திருவிழா நடக்கிறது. அனுமதி இலவசம். மாணவர்களுக்கு பல்வேறு குலுக்கல் போட்டிகள் நடத்தப்பட்டு புத்தகங்கள் பரிசளிக்கப்படுகிறது. கடந்த ஆண்டைவிட கூடுதலாக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. புதிய பதிப்பகங்களும் வந்துள்ளன.
Tags:    

Similar News