செய்திகள்
வானூர் அருகே விவசாயியிடம் பணம் பறித்த 2 வாலிபர்கள் கைது
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே விவசாயியிடம் பணம் பறித்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வானூர்:
விழுப்புரம் மாவட்டம் வானூர் போலீஸ் நிலையம் அருகே தாலுகா அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்துக்கு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களது குறைகளை கோரிக்கை மனுக்களாக கொடுக்க வருவது வழக்கம்.
நேற்றும் ஏராளமான பொதுமக்கள் மனுக்கள் கொடுக்க வந்திருந்தனர். அவர்களுடன் வானூர் அருகே உள்ள காசிபாளையத்தை சேர்ந்த ராமமூர்த்தி (வயது 37) என்பவரும் நின்று கொண்டிருந்தார்.
அப்போது 2 வாலிபர்கள் ராமமூர்த்தி வைத்திருந்த மணிபர்சை பறித்து கொண்டு ஓடினர். உடனே அவர் திருடன்... திருடன்... என கூச்சல் போட்டார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அந்த வாலிபர்களை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.
பின்னர் அவர்களை வானூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர்கள் வாதானூர் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் (20), காசிபாளையத்தைச் சேர்ந்த பிரவீன் என்பதும் தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் வானூர் போலீஸ் நிலையம் அருகே தாலுகா அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்துக்கு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களது குறைகளை கோரிக்கை மனுக்களாக கொடுக்க வருவது வழக்கம்.
நேற்றும் ஏராளமான பொதுமக்கள் மனுக்கள் கொடுக்க வந்திருந்தனர். அவர்களுடன் வானூர் அருகே உள்ள காசிபாளையத்தை சேர்ந்த ராமமூர்த்தி (வயது 37) என்பவரும் நின்று கொண்டிருந்தார்.
அப்போது 2 வாலிபர்கள் ராமமூர்த்தி வைத்திருந்த மணிபர்சை பறித்து கொண்டு ஓடினர். உடனே அவர் திருடன்... திருடன்... என கூச்சல் போட்டார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அந்த வாலிபர்களை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.
பின்னர் அவர்களை வானூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர்கள் வாதானூர் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் (20), காசிபாளையத்தைச் சேர்ந்த பிரவீன் என்பதும் தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.