செய்திகள்

10-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த ஆட்டோ டிரைவர்

Published On 2018-07-11 07:58 GMT   |   Update On 2018-07-11 07:58 GMT
தேனி அருகே 10-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.
உத்தமபாளையம்:

தேனி அருகே உத்தமபாளையம் ராயப்பன்பட்டியை சேர்ந்தவர் சேதுமணி மகன் சதீஸ்குமார்(வயது23). ஆட்டோ டிரைவர். திருமணமாகி அதேபகுதியில் மனைவியுடன் வசித்து வருகிறார்.

வடக்குதெருவை சேர்ந்தவர் 10-ம் வகுப்பு மாணவி பள்ளியில் இருந்து வீடு திரும்பும் போது அவரிடம் சதீஸ்குமார் ஆசைவார்த்தை கூறி ஆட்டோவில் அழைத்துச்சென்றுள்ளார்.

அதேபகுதியில் புதரில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி அழுதுகொண்டே தனது தாயிடம் கூறியுள்ளார். இதுகுறித்து ராயப்பன்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

போலீசார் வழக்குபதிவு செய்து சதீஸ்குமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். #tamilnews
Tags:    

Similar News